டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சில நாட்களுக்கு முன்பு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் காலேவின் அழைப்பை ஏற்று, ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கிரிக்கெட் போட்டியை காண வந்திருந்தார்.
இந்த தகவல் வைரலானது. ஆனால் வெளியில் தெரியாத இன்னொரு தகவலும் உண்டு. அது இளம் கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை தனிப்பட்ட முறையில் சந்தித்தது தான். தற்போது அந்த படங்களை வெளியிட்டிருப்பதால் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ரஜினியை சந்தித்துள்ளனர். ரஜினியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு தலைவர்" என்று கூறியுள்ளார் குல்தீப் யாதவ்.
இதேபோல், வாஷிங்டன் சுந்தர், இன்ஸ்டாகிராமில் அவர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது எப்டி இருக்கு" என்று பதிவிட்டுள்ளார்.




