மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் கிஷோர். அதையடுத்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடி குழு, சிலம்பாட்டம், பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பது போக மீதமுள்ள நேரங்களில் அவர் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் கிஷோர். அதோடு பெங்களூரில் தான் இயற்கை விவசாயம் செய்து விளையும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் அவர் கடைகளை நடத்தி வருகிறார். தற்போது தனது மனைவி, மகன்களுடன் இயற்கை விவசாயத்தில் கிஷோர் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.