மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல நடிகர் யஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்தனர். இந்த படங்களின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இந்த நிலையில் கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யஷ் அடிக்கடி துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், இதனால் அவரோடு இனிமேல் நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் அளித்த விளக்கத்தில், "சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யஷ் சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யஷ் உடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை. யஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யஷ் ரசிகையாகவே இருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார் .