டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமா உலகின் முக்கிய நட்சத்திர ஜோடி நயன்தாரா, விக்னேஷ் சிவன். இவர்களுக்கு கடந்த வருடம் வாடகைத் தாய் முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. கடந்த சில பதிவுகளாக தங்களது குழந்தையுடன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளைப் போட்டு வருகிறார். குழந்தைகளின் முகத்தைக் காட்டாமல் அவர் போடும் பதிவுகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
நேற்று இரவு, குழந்தைகளின் கைகளை பாசத்துடன் பிடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் புகைப்படத்தைப் பகிர்ந்து, “நமது அன்புக்குரியவர்களுடன் நடக்கும் எல்லாவற்றுடனும் மகிழ்ச்சி இணைக்கப்பட்டுள்ளது. அன்பு என்பது மகிழ்ச்சி, மகிழ்ச்சி என்பது அன்பு, அனைத்தையும் பற்றியது…. நீங்கள் வைத்திருக்கக் கூடிய அன்பு….” என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பு பறி போனது பற்றி விக்னேஷ் சிவன் சிறிதும் கவலைப்படவில்லை. தனது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரத்தை அது கொடுத்துள்ளது என்று ஒரு வாரம் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.




