இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சமந்தா நடித்து முடித்துள்ள படம் 'சாகுந்தலம்'. புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை குணசேகரன் இயக்கி உள்ளார். சமந்தாவுடன் தேவ் மோகன், சச்சின் கடேகர், மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
காளிதாசர் எழுதிய 'சாகுந்தலம்' என்ற புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இதில் சாகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக தேவ்மோகனும் நடித்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை படக்குழுவினருடன் பார்த்த சமந்தா அதுபற்றி தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது : சாகுந்தலம், அருமையான படம். குணசேகர் சார் என் இதயத்தை வென்றுவிட்டீர்கள். நமது காவியங்களில் ஒன்றான இந்தக் கதையை அழகாக எடுத்திருக்கிறீர்கள். இதன் உணர்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு பார்வையாளர்கள் குடும்பமாக நிச்சயம் மகிழ்வார்கள். குழந்தைகளும் இந்த மாய உலகத்தை ரசிக்கப் போகிறார்கள். இந்த அற்புதமான பயணத்துக்காக, தில் ராஜுக்கும் நீலிமாவுக்கும் (தயாரிப்பாளர்கள்) நன்றி. இந்தப் படம் எப்போதும் எனக்கு நெருக்கமான படமாக இருக்கும். என்று எழுதியுள்ளார்.