7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
இசை அமைப்பாளர்கள் மேடை இசை நிகழ்ச்சி நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என பலரும் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துகிறார். ஹாரிஸ் ஜெயராஜும், வித்யாசாகரும் இசை நிகழ்ச்சி நடத்த கிளம்பி விட்டார்கள். இந்த நிலையில் ஜி.வி.பிரகாசும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறார். முதன் முறையாக தனது தனி மேடை இசை நிகழ்ச்சியை கோவையில் வருகிற மே மாதம் 27ம் தேதி அரங்கேற்றுகிறார். தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்றிய பாடகர், பாடகிகள் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.