'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.
'வாடிவாசல்' கிராபிக்ஸ் பணிகளுக்காக அவதார் படத்திற்கு பணியாற்றிய வீடா டிஜிட்டல் நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக சூர்யா வாரத்திற்கு ஒருமுறை இரண்டு காளைகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.