டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'வாடிவாசல்' படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற குறுநாவலை தழுவி உருவாக உள்ள இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்திற்காக காளைகளுடன் பயிற்சி எடுக்கும் ஒத்திகை காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது.
'வாடிவாசல்' கிராபிக்ஸ் பணிகளுக்காக அவதார் படத்திற்கு பணியாற்றிய வீடா டிஜிட்டல் நிறுவனம் பணியாற்றவுள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இதற்காக சூர்யா வாரத்திற்கு ஒருமுறை இரண்டு காளைகளுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என கூறப்படுகிறது.




