புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாகுபலி படம் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர் தெலுங்கு நடிகர் ராணா. சமீப காலமாக பிரபல ஹீரோக்கள் வெப்சீரிஸ்களின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ள நிலையில் நடிகர் ராணாவும் முதன் முறையாக ராணா நாயுடு என்கிற வெப்சீரிஸில் நடித்துள்ளார்.
நிஜத்தில் இவரது சித்தப்பாவான நடிகர் வெங்கடேஷ், இந்த வெப்சீரிஸில் ராணாவின் தந்தையாக நடித்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் ஈகோ போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. சமீபத்தில் எட்டு எபிசோடுகளாக வெளியான இந்த வெப்சீரிஸுக்கு ஒரு பக்கம் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும் பொதுவான நெட்டிசன்கள் பலரிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வெளியாகின.
காரணம் இந்த இந்த வெப்சீரிஸில் ராணாவும் சரி.. வெங்கடேஷும் சரி, பல இடங்களில் சரளமாக கெட்ட வார்த்தைகளை பேசியுள்ளனர். இதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போதே கூட நடிகர் ராணா இது பற்றி கூறியிருந்தார். ஆனால் தற்போது இந்த வெப்சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களே ஒரு கட்டத்தில் இந்த வார்த்தைகளை கேட்டு எரிச்சல் அடையும் விதமாக ஓவர் டோஸ் ஆக மாறிவிட்டது. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்ததைக் கண்டு, நடிகர் ராணா தனது சோசியல் மீடியா பக்கத்தில், “இந்த வெப்சீரிஸை ஆதரித்தவர்களுக்கு நன்றி.. இதை வெறுப்பவர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.