டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். பான் இந்திய படமாக உருவாகி வரும் இப்படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அரசியல் கலந்த ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக வெளியாக உள்ளது. அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தெலுங்கு சினிமா முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்த அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாதம் 20ம் தேதி தொடங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் ராம்சரண், கியாரா அத்வானி வைத்து ஒரு பாடலை பிரமாண்டமாக படமாக்க ஷங்கர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்காக கலை இயக்குநர் அவினாஷ் கொல்லா இயக்கத்தில் ஐதராபாத்தில் பிரமாண்ட செட் தயாராகி வருகிறது. இப்பாடல் சுமார் பத்து கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் பட பாணியில் இந்த பாடல் கலக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் பாடலின் படப்பிடிப்பு சுமார் பத்து நாட்கள் நடைபெற உள்ளதாம்.
படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை வரும் மார்ச் 27ம் தேதி ராம்சரண் பிறந்தநாளில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




