சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
‛பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தார் மாரி செல்வராஜ். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‛மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கியதால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார். தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன.
இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை' என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து விட்டார். இந்தபடமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் துருவ். மேலும் கபடி விளையாட்டு தொடர்பான படம் என்பதால் அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு, மூன்று மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.