இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
‛பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருந்தார் மாரி செல்வராஜ். திடீரென்று உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‛மாமன்னன்' படத்தை இயக்கத் தொடங்கியதால் அந்த படத்தை தள்ளி வைத்திருந்தார். தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடக்கின்றன.
இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்பு முடிந்ததும் ‛வாழை' என்ற படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய மாரி செல்வராஜ் அந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது முடித்து விட்டார். இந்தபடமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் துருவ். மேலும் கபடி விளையாட்டு தொடர்பான படம் என்பதால் அதற்கான பயிற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டு, மூன்று மாதத்தில் இந்த படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். அனேகமாக ஜூலையில் படப்பிடிப்பு துவங்க அதிக வாய்ப்பு உள்ளது.