தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்குமே மிக பெரிய ரசிக பட்டாளமும் பெரிய மார்கெட்டும் உள்ளது. ஜூனியர் என்டிஆர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் உலக அளவில் மிக பெரிய வசூல் சாதனை ஈட்டியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ல் ஆண்டில் வெளிவந்த புஷ்பா முதல் பாகமும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தை இயக்குனர் கொரட்லா சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படமும் , அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய இரு படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.