சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் அல்லு அர்ஜுன் இருவருக்குமே மிக பெரிய ரசிக பட்டாளமும் பெரிய மார்கெட்டும் உள்ளது. ஜூனியர் என்டிஆர் கடைசியாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் உடன் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் உலக அளவில் மிக பெரிய வசூல் சாதனை ஈட்டியது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ல் ஆண்டில் வெளிவந்த புஷ்பா முதல் பாகமும் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக மாறியது. தற்போது அல்லு அர்ஜுன் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தை இயக்குனர் கொரட்லா சிவா இயக்குகிறார்.
இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30 வது படமும் , அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய இரு படங்கள் ஒரே தேதியில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.