இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஆர்.சந்துரு இயக்கத்தில் கிச்சா சுதீப், உபேந்திரா, ஸ்ரேயா நடித்துள்ள படம், 'கப்ஜா கன்னடத்தில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற மார்ச் 17ம் தேதி கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரேயா பேசியதாவது: தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அதனால் தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படம் இது. பெரும்பகுதி படப்பிடிப்பு அரங்கம் அமைத்து படமானது. அந்த அரங்கங்களில் தூசி நிறைய இருந்தது. இதனால் சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு நடித்தேன்.
தற்போது உருவாகும் படங்கள் பான் இந்தியா படங்களாக மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன. வசூலிலும் சாதனை படைக்கின்றன. இதன்மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது உறுதியானது. அனைத்துப் படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வரிசையில் இந்த படமும் அனைவருக்கும் பிடிக்கும். தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க கணவர் அதிக ஒத்துழைப்பு தருகிறார். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
எனது பெரிய ஆசை என்னவென்று கேட்டால் சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தேன் மீண்டும் அவரது ஜோடியாக நடிக்க ஆசை. அந்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். என்றார்.