இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் 'ரோபோ' சங்கர். இவரின் வீட்டில், சட்டவிரோதமாக கிளிகள் வளர்க்கப்பட்டதாக கூறி அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கிளிகள் வளர்த்ததாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்தால் வழக்கு இல்லை என்றும் வெறும் அபராதம் மட்டுமே விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது : ‛‛எங்கள் திருமணநாளுக்கு நண்பர்கள் பரிசாக அந்த கிளிகளை தந்தனர். நாங்கள் பச்சைக்கிளி என்றே நினைத்து வளர்த்தோம். பிராணிகள் மீது எங்களுக்கு பிரியம் அதிகம். நாய்க்குட்டி, மீன் வளர்ப்பது போன்று தான் இந்த கிளிகளையும் வளர்த்தோம். சில தினங்களுக்கு முன்பு தான் எங்களுக்கு தெரிந்தது அது விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ரக கிளி என்று. நாங்கள் இலங்கைக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக 14ம் தேதி சென்றோம். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர் உறவினர்களிடம் செய்தியை தெரிவித்து விட்டு கிளிகளை எடுத்து சென்றனர். எங்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் சில விசயங்களை தெரிந்து கொண்டோம்'' என்றார்.