ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
காந்தாரா படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற பிரிவில் 2023 ஆம் வருடத்தின் தாதா சாஹிப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியவை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதை பெற இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
கடந்த வருடம் கன்னடத்தில் வழக்கமான ஒரு சாதாரண படம் என்கிற அளவிலேயே வெளியான காந்தாரா திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியிலும் கூட இதே போன்ற வரவேற்பு காந்தாராவுக்கு கிடைத்தது. கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை, அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.