பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
காந்தாரா படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற பிரிவில் 2023 ஆம் வருடத்தின் தாதா சாஹிப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியவை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதை பெற இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
கடந்த வருடம் கன்னடத்தில் வழக்கமான ஒரு சாதாரண படம் என்கிற அளவிலேயே வெளியான காந்தாரா திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியிலும் கூட இதே போன்ற வரவேற்பு காந்தாராவுக்கு கிடைத்தது. கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை, அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.