டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

காந்தாரா படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்கிற பிரிவில் 2023 ஆம் வருடத்தின் தாதா சாஹிப் பால்கே விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட திருவிழா மற்றும் மத்திய தணிக்கை வாரியம் ஆகியவை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளன. வரும் பிப்ரவரி 20ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் தாதா சாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருதை பெற இருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
கடந்த வருடம் கன்னடத்தில் வழக்கமான ஒரு சாதாரண படம் என்கிற அளவிலேயே வெளியான காந்தாரா திரைப்படம், கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு எல்லா இடங்களிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தியிலும் கூட இதே போன்ற வரவேற்பு காந்தாராவுக்கு கிடைத்தது. கடவுள் மீது மக்கள் கொண்டுள்ள பக்தி, நம்பிக்கை, அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்த ரிஷப் ஷெட்டி அற்புதமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார். அதனாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.




