பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் வெளியாவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றை திரித்து இயக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார். முக்கியமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார். வரலாற்று அடிப்படையில் படங்களை எடுக்கும்போது எடுப்பதற்கு முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கி பயன்படுத்தும் நிலையில் போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்து வகையில் மணிரத்னம் வரலாற்றை திரித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆகியவற்றிடம் இந்த புகாரை அளித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டுமென அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.