ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் உருவான கன்னடப் படமான 'காந்தாரா' கடந்த வருடம் வெளிவந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலித்தது. வட கர்நாடகா கடற்கரைப் பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் குல தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து வெளிவந்த அப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலைப் பெற்றது.
அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துள்ளார். “படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கான ஆராய்ச்சியை செய்வதற்காக கர்நாடகா கடற்கரைப் பகுதிக்கு தனது உதவியாளர்களுடன் ரிஷப் சென்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்கிரிப்ட்டிற்கு ஏற்றபடி மழைக் காலத்தில் நடைபெற உள்ளது. முதல் பாகத்தை விடவும் கூடுதலான செலவில் படத்தைத் தயாரிக்க உள்ளோம். அடுத்த வருட கோடைக் காலத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறியுள்ளார்.
'காந்தாரா 2' படம் 'காந்தாரா' படத்திற்கு முந்தைய கதையைச் சொல்லக் கூடிய படமாக எடுக்கப்பட உள்ளதாம். காந்தாரா படத்தில் இடம் பெற்ற காவல் தெய்வம், காவல் தெய்வத்தின் கற்சிலையைக் கொண்டு சென்ற மலைநாட்டு மன்னன், இயற்கை வழிபாடு ஆகியவை 'காந்தாரா 2' படத்தின் கதையாக எழுதப்பட உள்ளது.