ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

மலையாள திரையுலகில் 10 ஆண்டுகளில் நேரம், பிரேமம் சமீபத்தில் வெளியான பிரித்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு என வெறும் மூன்று படங்களை மட்டுமே இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். அடுத்ததாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது ரசிகர்களுடன் உரையாடும் அல்போன்ஸ் புத்ரனிடம் சமீபத்தில் ஒரு ரசிகர், அஜித்தை வைத்து நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தனது நீண்ட நாள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அல்போன்ஸ் புத்ரன், “10 ஆண்டுகளுக்கு மேலாக அஜித்தை சந்திக்க முயற்சி எடுத்து வருகிறேன். இதுவரை எட்டு முறை சந்திக்கும் முயற்சியை எடுத்து கை கூடாமல் போனது. எனது பிரேமம் படம் வெளியானபோது படத்தின் நாயகன் நிவின்பாலியை போனில் தொடர்பு கொண்டு அஜித் பாராட்டினார்.
அப்படி அவரது பாராட்டை கூட இன்னொருவர் மூலமாக கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அஜித்தின் மேலாளர் உள்ளிட்ட இன்னும் அஜித்துக்கு நெருக்கமான சிலர் மூலமாக இப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன். எனக்கு வயதாவதற்குள் எப்படியாவது அஜித்தை சந்தித்து விடவேண்டும்.. எனக்கு அஜித் படத்தை மட்டுமல்ல கமல், விஜய் ஆகியோரின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தியேட்டர்களிலும் 100 நாட்களுக்கு குறையாமல் ஓடும் படமாக அது இருக்கும் என்று கூறியுள்ளார்.




