இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகை நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் நமக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என படம் பார்த்த ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த நித்யா மேனன் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார் நித்யா மேனன். அவர்களும் அதை ரொம்பவே ஆர்வமுடன் கேட்கிறார்கள். இந்த அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் இந்த புது ஆண்டில் எனக்கு கிடைத்த அன்பு இது. இங்கிருந்து நான் எடுத்து செல்வதற்கு எனக்கு நிறையவே கிடைத்தது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளும் அதிகப்படியான தன்மையுடனும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.