மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை நித்யா மேனன் கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் நமக்கும் இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என படம் பார்த்த ரசிகர்களை ஏங்க வைத்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றுக்கு விசிட் அடித்த நித்யா மேனன் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார் நித்யா மேனன். அவர்களும் அதை ரொம்பவே ஆர்வமுடன் கேட்கிறார்கள். இந்த அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ள நித்யா மேனன் இந்த புது ஆண்டில் எனக்கு கிடைத்த அன்பு இது. இங்கிருந்து நான் எடுத்து செல்வதற்கு எனக்கு நிறையவே கிடைத்தது. கிராமத்தில் உள்ள குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் தங்களை சுற்றி உள்ளவற்றை புரிந்து கொள்ளும் அதிகப்படியான தன்மையுடனும் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.