டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளிவந்த விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலித்தது என யார் முதலில் அறிவிக்கப் போகிறார்கள் என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
நேற்று நடந்த 'வாரிசு' படக்குழுவின் நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் கூட அது பற்றி அறிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் எதற்கு 100 கோடி என சொல்ல வேண்டும், நேரடியாக 150 கோடி வசூல் என அறிவித்தது 'வாரிசு' படக்குழு. 5 நாளில் இந்த வசூலை எட்டி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், 'துணிவு' படக்குழு இன்னும் 100 கோடி வசூலைக் கடந்தது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது. இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடியப்போகிறது.
'துணிவு' படமும் இந்நேரம் 100 கோடி வசூலைக் கடந்திருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அதை ரசிகர்களும் கொண்டாட முடியும். இருப்பினும் 'ரியல் வின்னர்' என்று மட்டுமே அப்படக்குழுவினர் இன்னமும் குறிப்பிட்டு வருகிறார்கள். என்ன வசூல் என படக்குழுவினர் இன்றாவது அறிவிப்பார்களா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.




