இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படத்தைப் பாராட்டி கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு பாராட்டுக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவானிடமிருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்கப் பெற்றதற்கு நிறைய அர்த்தம் உண்டு. கமல் சாரிடமிருந்து இப்படி ஒரு எதிர்பாராத பரிசைப் பெற்றது மிகவும் பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இப்படி ஒரு மதிப்பான பரிசைத் தந்ததற்கு நன்றிகள் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் அவரைப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் ரிஷப்பை 'காந்தாரா' படத்திற்காகப் பாராட்டியுள்ளனர்.