நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படத்தைப் பாராட்டி கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு பாராட்டுக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவானிடமிருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்கப் பெற்றதற்கு நிறைய அர்த்தம் உண்டு. கமல் சாரிடமிருந்து இப்படி ஒரு எதிர்பாராத பரிசைப் பெற்றது மிகவும் பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இப்படி ஒரு மதிப்பான பரிசைத் தந்ததற்கு நன்றிகள் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் அவரைப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் ரிஷப்பை 'காந்தாரா' படத்திற்காகப் பாராட்டியுள்ளனர்.