பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
கர்ணன் படத்தை அடுத்து உதயநிதியை வைத்து ‛மாமன்னன்' படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் கடந்த நவம்பரில் ‛வாழை' என்ற படத்தை ஆரம்பித்தார். கலை, நிகிலா விமல் நடிக்கும் இந்த படத்தை அவரே இயக்கி, தயாரிக்கிறார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு உள்ளேயே இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் மாரி செல்வராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.