ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கர்ணன் படத்தை அடுத்து உதயநிதியை வைத்து ‛மாமன்னன்' படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில் கடந்த நவம்பரில் ‛வாழை' என்ற படத்தை ஆரம்பித்தார். கலை, நிகிலா விமல் நடிக்கும் இந்த படத்தை அவரே இயக்கி, தயாரிக்கிறார். கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு உள்ளேயே இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டார். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழுவினர் மாரி செல்வராஜ் உடன் கேக் வெட்டி கொண்டாடினர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.