தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
90களில் தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வந்தவர் ஜெகபதிபாபு. கடந்த பத்து வருடங்களாக குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக தன்னை மாற்றிக்கொண்டு தென்னிந்திய அளவில் மிகவும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டுமென்பதை லட்சியமாக கொண்டுள்ள தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு அவரது படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார் ஜெகபதிபாபு.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெயலட்சுமி என்கிற மாணவி, தான் படித்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் சிவில் தேர்வுகளுக்கு தயாராவதற்கான பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சியை டிவியில் பார்த்த ஜெகபதிபாபுவின் தாயார் இது குறித்து தனது மகனிடம் கூறி அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அந்தப்பெண்ணை சந்தித்த ஜெகபதிபாபு, அவர் ஐஏஎஸ் படிப்பை முடிப்பதற்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.