கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் |

சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வரும் படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் டிசம்பர் 13-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி உள்பட பிரபலங்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஒருவார காலம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருவதால் இப்படத்திலும் வில்லனாகவே நடிப்பார் என்று தெரிகிறது.