நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி என பலர் நடித்து வரும் படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லாக் டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் டிசம்பர் 13-ந்தேதி படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினி உள்பட பிரபலங்கள் தனி விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் அங்கு ஒருவார காலம் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினிக்கும் ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அவர் வில்லன் வேடங்களிலேயே அதிகமாக நடித்து வருவதால் இப்படத்திலும் வில்லனாகவே நடிப்பார் என்று தெரிகிறது.