ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் தயங்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி இந்த வருடம் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி என்கிற இரண்டு படங்களும் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் வால்டர் வீரைய்யா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், குறிப்பாக அந்த படத்தில் ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்கிற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
“அந்த பாடல் காட்சியை பனி சூழ்ந்த மலைப்பகுதியில் படமாக்கினார்கள். அந்த காட்சியில் சேலை அணிந்து கொண்டு நடித்தேன். அப்படிப்பட்ட பனிப்பிரதேசத்தில் சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் நடிப்பது என்பது எவ்வளவு வசதி குறைவானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இனி இதுபோன்று இப்படி ஒரு காட்சியில் நடிக்கும் சூழ்நிலை வந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.. ஆனால் ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளை தான் விரும்பி ரசிக்கிறார்கள் என்றும் அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.