புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் தயங்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி இந்த வருடம் அவர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவுடன் ஜோடியாக நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி என்கிற இரண்டு படங்களும் வரும் சங்கராந்தி பண்டிகை அன்று ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் வால்டர் வீரைய்யா படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், குறிப்பாக அந்த படத்தில் ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்கிற பாடல் காட்சி படப்பிடிப்பின்போது கிடைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
“அந்த பாடல் காட்சியை பனி சூழ்ந்த மலைப்பகுதியில் படமாக்கினார்கள். அந்த காட்சியில் சேலை அணிந்து கொண்டு நடித்தேன். அப்படிப்பட்ட பனிப்பிரதேசத்தில் சேலை அணிந்து கொண்டு ஒரு பெண் நடிப்பது என்பது எவ்வளவு வசதி குறைவானது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இனி இதுபோன்று இப்படி ஒரு காட்சியில் நடிக்கும் சூழ்நிலை வந்து விடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.. ஆனால் ரசிகர்கள் இதுபோன்ற காட்சிகளை தான் விரும்பி ரசிக்கிறார்கள் என்றும் அதைத்தான் நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் என்னால் யூகிக்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.