ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் | பெல்ஜியம் கார் ரேஸ் : இரண்டாம் இடம் பிடித்த அஜித் அணி |
தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை கடைசியாக இயக்கிய செல்வராகவன், சாணிக்காயுதம், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து தற்போது பகாசூரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் பல வாழ்க்கை தத்துவங்களை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்'' என்று பதிவிட்டிருந்தார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பின. தனது தம்பியான நடிகர் தனுஷ் மனைவியை விவாகரத்து செய்ததை போல, இவரும் தனது மனைவி கீதாஞ்சலியை பிரிகிறாரா என பல்வேறு யூகங்கை கிளப்பியது. இந்த நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் மனைவி கீதாஞ்சலியுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பதிவிட்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.