Advertisement

சிறப்புச்செய்திகள்

இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்கு ஹீரோக்கள் நடிக்க மறுத்த பின்னரே விஜய்யின் கைக்கு வந்த வாரிசு

17 டிச, 2022 - 10:11 IST
எழுத்தின் அளவு:
After-4-heros-says-no,-Then-only-vijay-got-Varisu-offer

நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் நுழைந்து நடித்துள்ள வாரிசு தெலுங்கு படம் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க தமிழ் ரசிகர்களை மையப்படுத்தியே இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் தோழா என்கிற படத்தை கொடுத்த இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஜனவரி 12ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த படத்திற்கான தியேட்டர் ஒதுக்கீடு குறித்து சலசலப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் குறித்து புரமோசன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி கொடுத்து வரும் தயாரிப்பாளர் தில் ராஜு இந்தப் படத்தில் விஜய்யை நடிக்க வைத்தது குறித்து ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

அதாவது இந்த படத்தின் கதை முதலில் எழுதப்பட்டதே நடிகர் மகேஷ்பாபுவை மனதில் வைத்துதான்.. ஆனால் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால் அதன் பிறகு ராம்சரண், அவரை தொடர்ந்து பிரபாஸ், அல்லு அர்ஜுன் என இந்த கதை நான்கு ஹீரோக்களை முதலில் சுற்றி வந்துள்ளது. ஆனால் நான்கு பேருமே பிசியாக இருந்ததால் அதன்பிறகு தான் இந்த படத்திற்கு விஜய் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார் தில் ராஜு.

எது எப்படியோ வழக்கமாக மகேஷ்பாபு நடித்த ஹிட் படங்களை ரீமேக் செய்து இங்கே வெற்றி பெற்று வந்த விஜய், இப்போது அவருக்காகவே எழுதப்பட்ட நேரடி கதையிலேயே நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில் நேரடியாகவே இந்த வாரிசு மூலம் வெற்றியை குவிப்பாரா விஜய் ? பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள் - கமல்மகத்தான மனிதர்கள், மகத்தான ... சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் : மீண்டும் தமிழுக்கே திரும்பும் பாலா சம்பள விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in