எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத ராம்சரணின் இந்த 15வது படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கிய ஷங்கர், இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி இயக்கி வந்தார்.
அந்தவகையில் நியூசிலாந்தில் ராம்சரண், கியாரா அத்வானி இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தார் ஷங்கர். இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். ஷங்கர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக உப்பென்னா இயக்குனர் புஜ்ஜிபாபு சேனா டைரக்சனில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் ராம்சரண்.