ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் ராம்சரண். இன்னும் பெயரிடப்படாத ராம்சரணின் இந்த 15வது படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தியன்-2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கிய ஷங்கர், இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் மாறி மாறி இயக்கி வந்தார்.
அந்தவகையில் நியூசிலாந்தில் ராம்சரண், கியாரா அத்வானி இருவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கடந்த சில நாட்களாக படமாக்கி வந்தார் ஷங்கர். இந்தநிலையில் நியூசிலாந்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். ஷங்கர் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக உப்பென்னா இயக்குனர் புஜ்ஜிபாபு சேனா டைரக்சனில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் ராம்சரண்.