துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. தமிழை விட தெலுங்கு, மலையாளத்தில் அவருக்கு சிறந்த படங்களும், கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. தமிழில் அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வேறு எந்த மொழிகளிலும் புதிய படங்களை சாய் பல்லவி ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். தனது சொந்த ஊரான கோயம்பத்தூரில் சாய் பல்லவி மருத்துவமனை ஒன்றைக் கட்ட உள்ளதாக டோலிவுட்டில் செய்தி பரவி வருகிறது. ஜார்ஜியா நாட்டில் டாக்டருக்குப் படித்து முடித்தவர் சாய் பல்லவி. அங்கு படித்துக் கொண்டிருக்கும் போதுதான் மலையாளப் படமான 'பிரேமம்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
டாக்டருக்குப் படித்து முடித்துவிட்டு இன்னும் அதற்கான பணியில் இறங்காமல் இருப்பது குறித்து சாய் பல்லவி யோசித்து வந்தாராம். எனவே, சொந்த ஊரில் மருத்துவமனை கட்டி அங்கு தனது டாக்டர் பணியை ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. நடித்துக் கொண்டே அந்த பணியையும் பார்ப்பாரா அல்லது சில வருடங்களில் நடிப்பை விட்டு விலகுவாரா என்பது இனிமேல்தான் தெரியும் என்கிறார்கள்.