ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அஜித்தின் துணிவு படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனபோதிலும் விஜய்யின் வாரிசு படத்தை சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் -அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களுக்கும் சம அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதேபோல் தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு இரண்டு ஏரியாக்களுக்கு விஜய் -அஜித் படங்களுக்கு சம அளவு தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கூடிய சீக்கிரமே அஜித் - விஜய் படங்கள் தமிழகம் முழுக்க எந்தெந்த தியேட்டர்களில் வெளியாக போகிறது என்பது குறித்து தகவல் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.