விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் பரீனா ஆசாத். கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்திலும் தொடர்ந்து நடித்து வந்த பரீனா, பிரசவத்துக்கு பிறகும் சீக்கிரமே கம்பேக் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி கலந்த இன்பத்தில் ஆழ்த்தினார். இப்போதும் வில்லியாக கலக்கி வரும் அவர் இண்ஸ்டாவிலும் போட்டோஷூட் மாடலிங் என அதிக பாலோவர்களை பிடித்து வைத்திருக்கிறார். அவர் தற்போது தனது மகன் ஸயனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். துபாயில் உள்ள மெரீனா க்ரூஸ் யாட்ச் என்ற கப்பலில் மகனின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள பரீனா அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெண்பாவின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.