ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான படம் லைகர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப்படம் முதல் நாளிலேயே தோல்வி படமாக மாறி மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அந்த படத்தை தயாரித்த பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோருக்கும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என தெலுங்கு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தியது தனிக்கதை.
இந்த நிலையில் அமலாக்க துறையினர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி இருவரையும் அமலாக்கப்பிரிவு அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேரில் வந்து ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். லைகர் படத்தை தயாரிக்க செலவு செய்யப்பட்ட பணம் இங்கிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு மீண்டும் அங்கிருந்து இங்கே திருப்பி அனுப்பி படம் தொடர்பான செலவுகளுக்கு கருப்பு பணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விசாரிப்பதற்காகத்தான் இவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகினர். இவர்களிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2001ம் வருடம் தெலுங்கு திரையுலகில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இவர்கள் இருவரும் ஆஜராகி விளக்கம் அளித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.




