துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவின் சகலகலா வித்தகர் என போற்றப்பட்டவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம். பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பன்முகத்தன்மை கொண்டவர். இன்று இந்திய திரையுலகமே கொண்டாடும் இசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இவர் தான். அதோடு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரின் பல படங்களை தயாரித்து அவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற வழிவகுத்தவர்களில் இவரும் ஒருவர் என்றே சொல்லலாம்.
பஞ்சு அருணாச்சலத்தின் 80வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டிச., 2ம் தேதி சென்னையில் ‛பஞ்சு 80' என்ற பெயரில் பிரமாண்ட விழா கொண்டாடப்படுகிறது. இதை அவரது மகனும், நடிகருமான சுப்பு பஞ்சு முன்னெடுத்து நடத்துகிறார். இதில் இளையராஜா, பாரதிராஜா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. மேலும் திரையுலகில் உள்ள பல கலைஞர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
கடந்தாண்டே இந்த விழா நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னையால் இந்த நிகழ்வு தள்ளிப்போன நிலையில் இப்போது அந்த விழாவை வருகிற டிச., 2ல் பிரமாண்டமாய் நடத்த உள்ளனர்.