தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
இந்தியாவுக்கு சுதந்திரம் கேட்டு மகாத்மாக காந்தி அகிச்சை வழியில் போராடிய போது, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். அந்த ராணுவத்தில் பெண் உளவாளியாக இருந்தவர் நீரா ஆர்யா. அவரது வாழ்க்கை இப்போது நீரா ஆர்யா என்ற பெயரிலேயே திரைப்படமாக தயாராகிறது. இதில் நீரா ஆர்யாவாக கன்னட நடிகை ரூபா அய்யர் நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நாம் கொண்டாட வேண்டிய ஒரு தேசப்போராளியின் சரித்திர கதையில் நான் நடிக்கிறேன். ஐஎன்ஏவின் முதல் பெண் உளவாளி நீரா. அவரது கணவர் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்த போதிலும், அவர் நாட்டிற்காக போராடினார். சுபாஷ் சந்திரபோஸின் இருப்பிடம் பற்றிய தகவலை அவர் தெரிவிக்க மறுத்ததால் அவரது மார்பகங்கள் வெட்டப்பட்டன. தேசத்துக்காக தன் கணவனையே கொன்றவர். ஆனால் தன் கடைசி காலத்தில் பூ விற்று வாழ்க்கை நடத்தியவர்.
ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் படத்தின் கதை சொல்லப்படும். 1940களில் நடந்த உண்மையான சம்பவங்கள் காட்சியாக விரியும். இதற்காக நிறைய ஆய்வுகள் செய்து திரைக்கதை அமைத்துள்ளேன். சம்பவம் நடந்த இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்படுகிறது. லண்டன் மற்றும் அந்தமான் சிறையில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. என்றார் ரூபா அய்யர்.
ரூபா அய்யர் சிறந்த இயக்குனருக்கான விருதை இரண்டு முறை கர்நாடக அரசிடம் பெற்றவர். இதுவரை 5 திரைப்படங்களை தயாரித்துள்ளார், 4 படங்களை இயக்கி உள்ளார். 20 விளம்பர படங்களை இயக்கி உள்ளார்.