ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'.
இரண்டு பாகங்களாக வரும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டுளளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் போட்டோ ஷுட் வேலைகள் ஆரம்பமாகின. அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. முதலில் திரைக்கதை உருவாக்கத்தால் தாமதமானது. தற்போதைய தாமதத்திற்கு திருப்தியான லொகேஷன்கள் கிடைக்கவில்லை என்று தகவல். இதனால், பகத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் தங்களது தேதிகளை மீண்டும் மாற்றித் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2023ல் இரண்டாம் பாகம் வெளியாவது சந்தேகம்தான், 2024 துவக்கத்தில் வேண்டுமானால் வெளியாகலாம்.