சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. இந்த படத்தில் கதாநாயகியான கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை அபர்ணா வினோத். இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த ரினில்ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது தெரிகிறது.
மலையாளத்தில் 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா வினோத், அதைத்தொடர்ந்து கோகினூர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் பைரவா படத்தில் நடித்தார். பின்னர் கடந்த வருடம் தமிழில் வெளியான நடுவண் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.