மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. இந்த படத்தில் கதாநாயகியான கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை அபர்ணா வினோத். இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த ரினில்ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது தெரிகிறது.
மலையாளத்தில் 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா வினோத், அதைத்தொடர்ந்து கோகினூர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் பைரவா படத்தில் நடித்தார். பின்னர் கடந்த வருடம் தமிழில் வெளியான நடுவண் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.