ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதே திரைப்பட விழா, கோவாவில் நடக்கும் விழா. இந்த ஆண்டுக்கான 53வது சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அந்தந்த ஆண்டு வெளியான 25 சிறப்பான திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டு விழாவில் 3 தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது. த.செ ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்கள் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு விழாவில் திரையிடப்பட உள்ளன.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ.கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த படங்களில் 20 படங்களை தேர்வு செய்துள்னர். இதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேசிய நீரோட்ட திரைப்படப் பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.