ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரதமர் நரேந்திர மோடி பல சமயங்களில் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்றைய தினம் கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கினார். அங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற தமிழ் பாடலை பாடினார்கள். அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலையும் பாடினார்கள்.
இந்த பாடல்களை பிரதமர் மோடி ரசித்து கேட்டு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து தனது ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் ரீ-டுவீட் செய்துள்ளார் . அதோடு, இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன் போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.