இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரதமர் நரேந்திர மோடி பல சமயங்களில் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்றைய தினம் கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கினார். அங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற தமிழ் பாடலை பாடினார்கள். அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலையும் பாடினார்கள்.
இந்த பாடல்களை பிரதமர் மோடி ரசித்து கேட்டு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து தனது ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் ரீ-டுவீட் செய்துள்ளார் . அதோடு, இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன் போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.