அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
திருப்பூர்: தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த். இவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பலகுரலில் பேசும் திறன் மிக்கவர். நடிகர்களின் வாரிசுகள், திரைத்துறையில் கால்பதிப்பது வழக்கமாக உள்ளது. சின்னி ஜெயந்த் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கோ, கலெக்டர் ஆக பணிபுரிய மிகுந்த ஆர்வம்.
கடந்த 2019 ல் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில், இந்திய அளவில் 75 வது ரேங்க் பெற்று, மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலர் ஆக நியமிக்கப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர், தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களில், ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(அக்., 19) அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கூறியதாவது: கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிவேன். எனது முழு உழைப்பும், திருப்பூர் பகுதி பொதுமக்கள், தொழில் துறை நலனுக்காக இருக்கும். கல்வியில் மிளிர வேண்டும் என சிறு வயது முதலே பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.