முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம்தான் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. தமிழில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால், படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமா எடுக்கத் திட்டமிட்டதால் கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதியதாக சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“'புஷ்பா த ரூல்' படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிக்கர், டிசைனர் டியூனி ஜான் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றைக் கொடுக்க தங்கள் முயற்சிகளில் உள்ளார்கள்,” என படத்தின் போட்டோ ஷுட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.