நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம்தான் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. தமிழில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால், படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமா எடுக்கத் திட்டமிட்டதால் கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதியதாக சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“'புஷ்பா த ரூல்' படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிக்கர், டிசைனர் டியூனி ஜான் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றைக் கொடுக்க தங்கள் முயற்சிகளில் உள்ளார்கள்,” என படத்தின் போட்டோ ஷுட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.