லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதுகுறித்த தகவலை அவர்கள் வெளியிட்டதை அடுத்து வாழ்த்துகளும் விமர்சனங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்ற விஷயம் சர்ச்சையாகவும் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடிகர் கார்த்தி, ஒரு வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், பெற்றோர்களின் அணிக்கு உங்களை வரவேற்கிறேன். உங்கள் நான்கு பேரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று எழுதி இருக்கிறார் கார்த்தி. இதற்கு விக்னேஷ் சிவன் கார்த்திக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே தங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதை அடுத்து அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்களுக்கு எந்த படங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.