மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' |
இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையான எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதற்காக படம் பற்றிய நிகழ்ச்சிகளுக்காக ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளர். அங்கு ஆர்ஆர்ஆர் படம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆர்ஆர்ஆர் படம் ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிக்கிறதே என்று கேள்வி எழுப்ப்பட்டது.
அதற்கு ராஜமவுலி அளித்த பதில் வருமாறு: பலரும் ஹிந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அது தர்மம், இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், ஹிந்து மதத்திற்கு முன்பு அது 'ஹிந்து தர்மமாக' இருந்தது. ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் ஹிந்து அல்ல.
அதே சமயம் 'ஹிந்து தர்மம்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர ஹிந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் ஹிந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன், இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.