300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையான எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருதுக்கு பல பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதற்காக படம் பற்றிய நிகழ்ச்சிகளுக்காக ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளர். அங்கு ஆர்ஆர்ஆர் படம் பற்றிய கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆர்ஆர்ஆர் படம் ஹிந்து மதத்தை உயர்த்தி பிடிக்கிறதே என்று கேள்வி எழுப்ப்பட்டது.
அதற்கு ராஜமவுலி அளித்த பதில் வருமாறு: பலரும் ஹிந்து என்பது மதம் என நினைக்கிறார்கள். அப்படியல்ல, அது தர்மம், இன்றைய காலக்கட்டத்தில் தான் அது மதம். ஆனால், ஹிந்து மதத்திற்கு முன்பு அது 'ஹிந்து தர்மமாக' இருந்தது. ஹிந்து தர்மம் என்பது வாழ்க்கை முறை; அது ஒரு தத்துவம். மதமாக எடுத்துக்கொண்டு பார்த்தால் நான் ஹிந்து அல்ல.
அதே சமயம் 'ஹிந்து தர்மம்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் தீவிர ஹிந்துதான். நான் படத்தில் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும், அதனால் வரும் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்பதையும் ஹிந்து தர்மம் போதிக்கிறது. எனவே, நான் ஹிந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன், இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.