பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் மிரள். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: பரத்தும், வாணி போஜனும் கணவன், மனைவி, அவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னையில் வாழும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது. இதனால் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபடுவதற்காக தென்காசிக்கு வருகிறர்கள். பூஜை முடிந்து அந்த பகுதியில் கள்ள காற்றாலை வழியாக இரவு நேரத்தில் திரும்புகிறார்கள்-. அப்போது அவர்களுக்கு ஏற்படும் திரிலான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதுவரை காற்றாலை பின்னணியில் எந்த படமும் வந்தில்லை. 24 நாள் வரை காற்றாலை பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை செட் போட்டு படமாக்கினோம். வித்தியாசமான த்ரிலர்லர் அனுபவமாக படம் இருக்கும். என்றார்.