பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அயன் முகர்ஜி இயக்கத்தில், ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான படம் 'பிரம்மாஸ்திரா'. மூன்று பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது.
பெரும் எதர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் 'பாய்காட்' டிரெண்டிங்குகளையும் மீறி குறிப்பிடத்தக்க வரவேற்பையும், நல்ல வசூலையும் பெற்றது. 25 நாட்களில் 425 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த 2022ம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.
முதல் பாகம் 'பிரம்மாஸ்திரா - சிவா' என்று வெளியாகிய நிலையில் இரண்டாம் பாகத்தை 'பிரம்மாஸ்திரா - தேவ்' என வெளியிட உள்ளனர். அடுத்து வெளியாக உள்ள இரண்டு பாகங்களில் மேலும் சில கதாபாத்திரங்கள் படத்தில் இடம் பெறும் என இயக்குனர் அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார். அதோடு 'அஸ்திரங்கள்' பற்றிய வெப் தொடர் ஒன்றை 9 பாகங்களாக உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறியிருக்கிறார்.