தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளியான நாளிலிருந்தே தினமும் படத்தைப் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காலாண்டு விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
படம் வெளியான ஐந்து நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'சர்க்கார், பிகில்' ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்து தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அளவில் இப்படம் 170 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் வசூல் கடந்த ஐந்து நாட்களில் ரூ.300 கோடியைக் கடந்திருக்கும் என்றும் இந்த வார இறுதிக்குள் ரூ.500 கோடியைக் கடக்கும் என்றும் மேலும் தெரிவிக்கிறார்கள்.