மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படம் 5 தேசிய விருதுகளை வென்றது. டில்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா. இதேப்போல் நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். சிறந்த படத்திற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 2டி நிறுவனத்தின் ஜோதிகாவும் விருது வென்றார்.
பாரம்பரிய உடையில் இவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து விருதுகளை பெற்றனர். சூர்யாவிற்கு முதல் தேசிய விருது என்பதால் சூர்யாவின் அப்பா சிவகுமார், அம்மா லக்ஷமி ஆகியோரும், சூர்யாவின் குழந்தைகளும் பங்கேற்றனர். பெற்றோர்கள் வாங்கிய விருதை ஏந்திய படி தியா, தேவ் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. அதோடு சூர்யா விருது பெற்றபோது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெற்றபோது சூர்யாவும் போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
தேசிய விருது பெற்ற கையோடு தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சூர்யா, ‛‛சுதாவிற்கு என்றென்றும் நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விருது எனது அன்பான ரசிகர்களுக்காக...'' என பதிவிட்டுள்ளார்.