எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். இந்த படம் 5 தேசிய விருதுகளை வென்றது. டில்லியில் நேற்று நடந்த தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார் சூர்யா. இதேப்போல் நாயகி அபர்ணா பாலமுரளி, இயக்குனர் சுதா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் விருதுகளை பெற்றனர். சிறந்த படத்திற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான 2டி நிறுவனத்தின் ஜோதிகாவும் விருது வென்றார்.
பாரம்பரிய உடையில் இவர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து விருதுகளை பெற்றனர். சூர்யாவிற்கு முதல் தேசிய விருது என்பதால் சூர்யாவின் அப்பா சிவகுமார், அம்மா லக்ஷமி ஆகியோரும், சூர்யாவின் குழந்தைகளும் பங்கேற்றனர். பெற்றோர்கள் வாங்கிய விருதை ஏந்திய படி தியா, தேவ் இருவரும் உற்சாகமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. அதோடு சூர்யா விருது பெற்றபோது ஜோதிகாவும், ஜோதிகா விருது பெற்றபோது சூர்யாவும் போனில் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
தேசிய விருது பெற்ற கையோடு தனது குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள சூர்யா, ‛‛சுதாவிற்கு என்றென்றும் நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த விருது எனது அன்பான ரசிகர்களுக்காக...'' என பதிவிட்டுள்ளார்.