எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தினம் என்பதாலும், விஜயதசமி விடுமுறை வருவதாலும் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது.
படத்திற்கான பிரமோஷன் மிகவும் குறைவாக உள்ளது என்று விமர்சனம் எழுந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமே இந்த முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. இன்னும் பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. இன்றும், நாளையும் ஆரம்பமாக உள்ளது. படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் தமிழில் முதல் நாள் வசூலாக புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளில் முன்பதிவு ஆரம்பமான நிலையில், அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் கூட நடக்கவில்லை.