பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா | காந்தாரா 2 படப்பிடிப்பில் படகு விபத்து நடந்ததா? : தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | “மஞ்சுவாரியரை அறிமுகப்படுத்த அவரது தந்தை என்னிடம் வாய்ப்பு கேட்டார்” : நெகிழ்ந்த ஊர்வசி | ஆதங்கப்பட்ட அனுபமா பரமேஸ்வரன்... : சமாதானப்படுத்திய சுரேஷ் கோபி |
தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியவர் கபிலன். தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். இவரது 27 வயது மகள் தூரிகை சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைளை ஏற்படுத்தியது. அதையடுத்து நடந்த விசாரணையில் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்ததால் அவர் அந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தனது மகள் குறித்து கவிதை ஒன்று எழுதி இருக்கிறார் கபிலன். அதில்,
‛‛எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டாள் நான் எப்படி தூங்குவேன்.
எங்கே போனாள் என்று தெரியவில்லை. அவள் காலணி மட்டும் என் வாசலில்.
மின்விசிறி காற்று வாங்குவதற்கா உயிரை வாங்குவதற்கா?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்.
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது. அவளே என் கடவுள்.
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது. கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி.
யாரிடம் பேசுவதுஎல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்.
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பி இருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு.
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்''
இவ்வாறு உருக்கமாக தெரிவித்துள்ளார்.