தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
கடந்த ஒரு வருடமாகவே ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் சமயத்திலிருந்து எந்நேரமும் அடர்ந்த தாடியுடனே காணப்பட்டார் ராம்சரண். அடுத்ததாக தற்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவரது தோற்றம் ஏற்கனவே பார்த்த ஒன்றாகவே இருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது நவிமும்பை பகுதியில் உள்ள தனது உறவினர் பெண் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருந்தார் ராம்சரண். அவரது தோற்றத்தை பார்க்கும்போது துல்கர் சல்மான் தான் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு முகத்தோற்றமும், உடையும் துல்கர் சல்மனை ஞாபகப்படுத்துவது போலவே முற்றிலும் மாறி இருந்தது. புதிய தோற்றத்தில் ஸ்டைலாக இருந்த அவரை பார்த்து அங்கிருந்த மாணவிகள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
இது ஒரு பக்கமிருக்க சர்க்காரு வாரி பாட்டா படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது. இதற்காக படப்பிடிப்பு தளத்திற்கு வந்த மகேஷ்பாபுவின் புதிய லுக் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் வித்யுத் ஜாம்வாலையும் போலவும் இன்னொரு பக்கம் கவுதம் கார்த்திக்கையும் ஞாபகப்படுத்துவது போன்று அமைந்துள்ளது மகேஷ்பாபுவின் இந்த புதிய தோற்றம். காரணம் இதுவரை இல்லாத ஒரு புதிய ஹேர்ஸ்டைலில் ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடனும் காணப்படுகிறார் மகேஷ்பாபு. இந்த தோற்றத்தில் தான் அவர் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். அந்தவகையில் இந்த மாறுபட்ட தோற்றங்களில் தங்களது ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர் மகேஷ்பாபுவும் ராம்சரணும்.