நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தயாரிப்பாளர் ரவீந்திரனும், சீரியல் நடிகை மகாலட்சுமியும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த தகவல்கள் வெளியான போது அவர்கள் இருவரின் வயது வித்தியாசம் குறித்தும், இது நிஜமான திருமணமா இல்லை ஏதாவது சீரியல் விளம்பரத்திற்காக இப்படி ஒரு புகைப்படங்கள் வெளியாகி உள்ளதா? என்றும் சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இப்படியான நிலையில் தற்போது ரவீந்திரன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், தங்களது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டபோது பாசிட்டிவ்- நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனம் வெளியானபோதும் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை வனிதா விஜயகுமாருக்கும் ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதாவது, பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்ட போது பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக வனிதா விஜயகுமாரை அப்போது விமர்சனம் செய்தவர்களில் தயாரிப்பாளர் ரவீந்திரனும் ஒருவர். அதன் காரணமாகவே இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருப்பதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டிருந்தார் வனிதா விஜயகுமார். அந்த பதிவில், கர்மா யாரையும் விடுவதில்லை. அதுதான் தற்போது ரவீந்திரனை நோக்கி திரும்பி வந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அதற்கு ரவிந்திரன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில் ‛வனிதா பதிவை படித்தேன். அதில் குருமா இஸ் மை... என ஏதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை. அதைப்பற்றி இப்போது பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை. அதனால் எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.