‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் பவன் கல்யாணின் பிறந்தநாள் சமீபத்தில் அவர்களது அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அவர் பல வருடங்களுக்கு முன் நடித்த நடித்த ஹிட் படமான ஜல்சா, சில தியேட்டர்களில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. அதேசமயம் விஜயவாடாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் கொண்டாட்டம் என்கிற பெயரில் ரசிகர்கள் திரையைக் கிழித்து நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இருக்கைகளில் உள்ள பஞ்சு பிய்த்தெறியப்பட்டு, பல நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. மேலும் பல மதுபான பாட்டில்களும் தியேட்டருக்குள் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு மாதத்திற்கு அந்த தியேட்டரில் இனி படங்கள் திரையிட முடியாது முடியாத நிலை உருவாகி உள்ளது.
அதுமட்டுமல்ல தியேட்டரை மீண்டும் சீர்செய்ய குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு ஒருமாத காலம் பிடிக்கும் என்றும் அந்த தியேட்டர் மேலாளர் சோசியல் மீடியா பக்கத்தில் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். உங்களது மூன்று மணி நேர கொண்டாட்டத்திற்காக எங்களது ஒரு மாத வாழ்வாதாரத்தை அழித்து விட்டீர்களே.. இதைத்தான் உங்கள் ஹீரோ உங்களுக்கு சொல்லித் தந்தாரா என்று ஆதங்கத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளார் அந்த நிர்வாகி.




